logo
புதுகைக்கு கூடுதல் மருத்துவப்பணியாளர்கள் தேவை: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோரிக்கை

புதுகைக்கு கூடுதல் மருத்துவப்பணியாளர்கள் தேவை: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோரிக்கை

12/May/2021 05:33:11

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிக்கும்படி மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோருக்கு போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லை. இதனால்,  கொரோனா தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க காலதாமதம் ஆகிறது. எனவே, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக மருத்துவ அலுவலர்கள் 50, செவிலியர்கள் 100, லேப் டெக்னீசியன்கள் 20, இதர பணியாளர்கள் 60 பேரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என  மனுவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குறிப்பிட்டுள்ளார்

Top