06/May/2021 04:53:45
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் சிகிச்சைக்காக 1,110 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்காணும் மருத்துவமனைகள் மற்றும் இதர இடங்களில் மொத்தம் 2,060 படுக்கைகள் உள்ளன.
நோய் அறிகுறிகளுடன் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 450 படுக்கைகள், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 70 படுக்கைகள், 12 தாலுகா அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், 6 தனியார் மருத்துவமனைகளில் 190 படுக்கைகள் என மொத்தம் 1,110 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நோய் அறிகுறி இல்லாத
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 10 மேம்படுத்தப்பட்ட
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள், குடுமியான்மலை ஸ்டாமின் வேளாண்துறை விடுதியில் 150 படுக்கைகள், புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர்
நல மாணவ விடுதியில் 125 படுக்கைகள், புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நல
மாணவா; விடுதியில் 75 படுக்கைகள், விராலிமலை ஐ.டி.ஐ -யில் 125 படுக்கைகள்.
அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் 75 படுக்கைகள், புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் என மொத்தம் 950 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3.5.2021 தேதியில் 424 ஆக்சிஜன் வசதி படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 72 மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லா படுக்கைகள் 1,564 படுக்கைகள் என மொத்தம் உள்ள 2,060 படுக்கைகளில் 400 நோயாளிகள் அறிகுறிகளுடனும், 142 நோயாளிகள் அறிகுறிகளின்றியும் மொத்தம் 542 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையிலுள்ள நிலையில் 1,518 படுக்கைகள் (74%) காலியாக உள்ளது.