logo
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.30 ஆயிரம் அபராதம்

29/Apr/2021 09:23:30

ஈரோடு, ஏப்: ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும் மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநகர் பகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து கடைகளுக்கு அபராதமும் பூட்டி சீல் வைத்தும் வருகின்றனர்.

 ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நான்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த உதவி ஆணையாளர்கள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடைகள் வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி புதன்கிழமை  ஒரே நாளில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து அந்த 6 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் முக கவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத வர்கள் என நேற்று ஒரே நாளில் ரூ 30,000 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top