logo
ஈரோடு மாநகர் பகுதியில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்: ஆட்சியர்  தொடங்கி வைப்பு

ஈரோடு மாநகர் பகுதியில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைப்பு

26/Apr/2021 06:09:50

 ஈரோடு, ஏப்: ஈரோடு மாநகர் பகுதியில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்   தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற  நடமாடும் கொரோனா பரிசோதனை  வாகன தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரும்  தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. கதிரவன் தலைமை  வகித்து,  7 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது:ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகர் பகுதியில் தொற்று அதிகமாக பரவி வருகிறதுஇதையடுத்து கொரோனா பரவலை  கட்டுப்படுத்த கூடுதல் பரிசோதனைக்கு ஏற்படுத்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பாடுக்கு வந்துள்ளது.

மாநகர் பகுதியில் 672 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை யில் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்து சுகாதாரத் துறையினர் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர்

இதில் மாநகர் பகுதியில்  எந்த இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களுக்கு இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் செல்லும். அந்தப் பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து. சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படும்.

சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவு வரும்வரை அந்த நபர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிவில் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதில் முழு உடல் பரிசோதனை செய்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா அல்லது மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாம் என்று முடிவு செய்யப்படும்.

 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்இன்று தனியார் பங்களிப்புடன் 3 வாகனங்களும், அரசு உதவியுடன்வாகனங்கள் என 7 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் பணியில் இருப்பார்கள் என்ரார் அவர்.

 

                                                   

Top