logo
புதுக்கோட்டை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த சுமார் 306 பவுன் தங்க நகைகள் கையாடல்: ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த சுமார் 306 பவுன் தங்க நகைகள் கையாடல்: ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு

23/Apr/2021 11:42:20

புதுக்கோட்டை, ஏப் புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில்  ஒரு கோடி மதிப்பிலான நகையை காணவில்லை என்று அந்த நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும்  3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதுக்கோட்டையில் தெற்கு 4-ஆம் வீதியில் உள்ள ஹெட்ச் டி பி -என்ற நிதி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறதுஇங்கு நகை கடன் தனிநபர் கடன் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அளிக்கப்பட்டு  வந்தது. இந் நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கடன்கள்  பற்றிய கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

 அப்போது நகை கடன் பிரிவில்  முறைகேடு நடந்தது  தெரிய வந்தது.   கடந்த  ஓராண்டாக 306 பவுன் நகை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது

இந்நிலையில்  திருச்சியிலுள்ள மண்டல மேலாளர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டையில் பணியாற்றிய கிளை மேலாளர் உமாசங்கர், ஊழியர்கள் சோலைமணிமுத்துக்குமார்  ஆகிய 3 பேர் மீது  கணேஷ் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில்  வாடிக்கையாளர்கள்  அடகு வைத்திருந்த நகைகள் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .                                                 

Top