02/Mar/2021 12:47:00
புதுக்கோட்டை, மார்ச்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்படும் வாராந்திர குறைகேட்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் குறைகளைக் கேட்பதில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தும் பொதுமக்கள்.