logo
தா பாண்டியன் மறைவையொட்டி ஈரோட்டில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி  ஊர்வலம்

தா பாண்டியன் மறைவையொட்டி ஈரோட்டில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்

28/Feb/2021 07:26:26

 ஈரோடு,பிப்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் உடல்நலக்குறைவால்  காலமானார்.


இவரது மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் த்து கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அமைதி ஊர்வலம் நடந்தது.

  ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் தொடங்கிய இந்த ஊர்வலம் மேட்டூர் ரோடு வழியாக வஉசி பார்க்கில் நிறைவடைந்தது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்த  இரங்கல்  கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, தொழிற்சங்க சுப்பிரமணி, ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாநகர காங்கிரஸ் தலைவர் இ.பி ரவி, பாஜக பிரசார அணி முன்னாள் அமைப்பாளர் சரவணன், பாமக ஆறுமுகம்  உள்ளிட்டோர் பேசினர்.

Top