logo

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

20/Feb/2021 09:33:16

புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  கார்த்திகையை  முன்னிட்டு  இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி,  காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு,  பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

 மாலையில்  தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும்  அருள் பாலித்தார். இதில்,   திரளான  பக்தர்கள் வருகைதந்து   வழிபட்டனர்.   ஏற்பாடுகளை  ஸ்ரீ பாலா ஸ்ரீ  சிவாச்சாரியார் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.   

Top