logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 6,631 முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 6,631 முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத் துறையினர் தகவல்

19/Feb/2021 04:59:29

ஈரோடு, பிப்: நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை, சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் ஜனவரி- 16 -ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

 முதல்கட்டமாக  அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக பிற துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதன்படி வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

 பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுதா, லோட்டஸ் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

இதுகுறித்து சுகாதார துறை பணியாளர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோட்டில் இரண்டு தனியார்  மருத்துவமனைகளிலும்  கொரோனா தடுப்பு ஊசி முன் கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் ஜனவரி  16-ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 6,631 முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது.  இதில்  புதன்கிழமை மட்டும் 486 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தது.

தற்போது அது பற்றிய அச்சம் விலகி உள்ளதால்  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் நலமாக உள்ளனர்.  7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று  அவர்கள் கூறினர்.

Top