logo
ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி: போலீசார் விசாரணை

ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி: போலீசார் விசாரணை

11/Feb/2021 09:04:37

ஈரோடு, பிப்:ஈரோடு கொடுமுடி ரயில் நிலையத்திற்கும் புகளூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து,  சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் அந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில் லையாம்.

எனினும்  முதல்கட்ட விசாரணையில், ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி அந்த முதியவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது.  இறந்த முதியவர் ரோஸ் கலர் அரைக்கை சட்டையும், ஊதா வெள்ளை சிமெண்ட் கலர் லுங்கியும் அணிந்திருந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top