logo
சட்டப்பேரவைத்தேர்தல்: புதுக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

சட்டப்பேரவைத்தேர்தல்: புதுக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

10/Feb/2021 12:08:48

புதுக்கோட்டை, பிப்: தமிழகத்தில் நடைபெறவுள்ள  சட்டப்பேரவைத்  தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 50% வேட்பாளர் பட்டியலை கடந்த மாதம் அக்கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டார் .

 இதில் புதுக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக  சசிகுமார்  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதி முழுவதும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக செம்பட்டி விடுதி நால்ரோடு, ஆதனக்கோட்டை, வாராப்பூர் போன்ற பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சசிகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வேட்பாளரை அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவின் முக்கிய கூறுகளை எடுத்துரைத்து புதுக்கோட்டை தொகுதி மக்களுடன் கலந்துரையாடி தங்கள் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில், வேட்பாளர் சசிகுமாருடன்  சட்டப்பேரவைத் தொகுதி தலைவர் வே. கு. கருப்பையா, துணைத்தலைவர் பொன்வாசிநாதன், துணைத்தலைவர் சண்முகநாதன், சு. ப.கண்ணன், துணைச் செயலாளர் கோபி, இணைச்செயலாளர் சசிகுமார், பொருளாளர் வீரப்பன், செய்தி தொடர்பாளர் திருலோகசந்தர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.


Top