27/Jan/2021 07:09:20
ஈரோடு, ஜன: சசிகலா புதன்கிழமை(ஜன.27) விடுதலை ஆனதை ஒட்டி தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் ஆகிய தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.தங்கராஜ் தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு ஜி.எச். ரவுண்டானாவில் தங்கராஜ் தலைமையில் அமமுகவினர் பட்டாசு வெடித்தது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.