logo
72-ஆவது குடியரசு நாள் விழா: ஈரோட்டில் தேசியக்கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் அளிப்பு

72-ஆவது குடியரசு நாள் விழா: ஈரோட்டில் தேசியக்கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் அளிப்பு

26/Jan/2021 08:53:22

ஈரோடு-ஜன:  நாட்டின் 72-ஆவது குடியரசு நாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக  ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். 

பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர்,தீயணைப்புதுறையினர், முன்னாள் படைவீரர் நலத்துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 197 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள்,பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சர்புதீன், வட்டாட்சியர் பரிமளா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Top