logo
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் சுற்றுலா கலைவிழா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் சுற்றுலா கலைவிழா

14/Jan/2021 07:53:14

புதுக்கோட்டை,ஜன: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  சமத்துவப் பொங்கல் மற்றும் சுற்றுலா கலைவிழாவுக்கு  தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்து மேலும் அவர் கூறியது:

 தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் உணவு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றும் உழவர்கள் முதல் கால்நடைகள் வரை அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் தமிழர்களின் தைப்பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழாவும், சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா கலைவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதன் மூலம் தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில் அரசால் நடத்தப்படுகின்ற இவ்விழாவில் அனைவரும் பங்கேற்றது மகிழ்ச்சிக்குரியது.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top