logo
ஈரோடு தேமுதிக தொழில்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கல்

ஈரோடு தேமுதிக தொழில்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கல்

14/Jan/2021 12:03:17

ஈரோடு-ஜன:  ஈரோடு தேமுதிக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த தெழிலாளர் சங்க அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 

ஈரோடு தேமுதிக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஈ.ஆர்.டி. மூர்த்தி,பொருளாளர் லோகநாதன், துணைச் செயலாளர் என்.சரவணமூர்த்தி, ஆட்டோ தொழிற்சங்கம் பொன்னுசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்சசியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் கலந்து கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, முழு நீள கரும்பு, ஆண்களுக்கு வேட்டி சட்டைகள், பெண்களுக்கு சேலைகள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் என பல்வேறு பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

இதில், வீரப்பன்சத்திரம் பகுதி கழக செயலாளர் மாரிமுத்து , ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் ரங்கராஜ்,ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பாலாஜி, துணைச் செயலாளர் ஜீவானந்தம், மாநகர் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சிலம்பரசன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சஞ்சய்குமார், மாவட்ட நிர்வாகி ரம்யா, பகுதி கழக செயலாளர் மோகனசுந்தரம் சூரியம்பாளையம் பகுதி கழக செயலாளர் நைனாமலை,  வீரப்பன்சத்திரம் பகுதி கழக அவைத் தலைவர் சக்திவேல், வட்டக் கழக செயலாளர் ஜெகநாதன் மற்றும் மகளிர் அணியினர், பொதுமக்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top