logo
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

14/Jan/2021 11:52:39

ஈரோடு, ஜன:ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் விஜய பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ் டி பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வின்சென்ட், கராத்தே யூசப், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்ஷா, சிராஜுதீன், கறிக்கடை யூசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நிர்வாகிகள் அங்காள பரமேஸ்வரி, கோமதி ஆகியோர் பொங்கல் வைத்தனர். பின்னர் பொங்கல்  கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை வைராபாளையம் மாது  செய்திருந்தார்

Top