03/Jan/2021 09:52:29
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக பக்தர்களின் பயன்படுத்தும் வகையில் தானியங்கி (சென்சார் சிஸ்டம்) கிருமி நாசினி அளிக்கும் இயந்திரத்தில் கிருமி நாசினி இல்லாததால் வெறும் காற்று மட்டுமே வருகிறதாம். இது குறித்து கோயில் நிர்வாக அலுவலகத்தில் பக்தர்கள் கூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்