logo
இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த மேலும் 6 பேர்  தனிமைப்படுத்தி  தீவிர கண்காணிப்பு

இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த மேலும் 6 பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

24/Dec/2020 08:09:34

ஈரோடு, டிச: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம்  அதிகரித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே   இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இது சாதாரண கொரோனா பாதிப்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இது அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டுக்கான விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி உள்ளது. இந்தியாவிலும் இங்கிலாந்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியவர்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழக சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இங்கிலாந் தில் இருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி, கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து ஈரோடு வந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் அடையாளம் கண்டு வருகின்றனர். அப்போது 16 பேர் இங்கிலாந் திலிருந்து ஈரோடுக்கு வந்து இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்துள்ளனர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு வந்துள் ளனர் .அவர்கள் 16 பேரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு நாடு திரும்பியுள்ளனர் அவர்களுக்கு நெகட்டிவ் சான்றிதழ் வந்துள்ளது.

 இருந்தாலும் இங்கிலாந்தில் தற்போது பரவி ஒரு புதிய வகை கொரோனா தொற்று காரணமாக 16 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 14 நாட்கள் வீடுக ளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தாரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார துறை பணியாளர்கள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில்,  இங்கிலாந்தில் இருந்து ஈரோடுக்கு வந்த மேலும் 6 பேர் அடையா ளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியபடி இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.மேலும் அவரது குடும்பத் தாரும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். அதன்படி நேற்று முன்தினம் 16 பேர் கண்டறியப்பட்டு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் 6 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 16 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளி வரும். இதேபோல் மேலும் புதிதாக கண்டறியப்பட்ட 6  பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தால் அந்த  மாதிரிகள் புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது எந்தவகையான கொரோனா என கண்டறியப்படும் என்றார்.

Top