24/Dec/2020 07:17:15
ஈரோடு-டிச: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33 -ஆவது நினைவுநாள் மற்றும் தந்தை பெரியாரின் 47-ஆவது நினைவு நாளையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர்- பெரியார் உருவச் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் பெரியார் உருவச் சிலைகளுக்கு முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. சி .ராமசாமி, முன்னாள் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னைய.ன், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரதீப், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால். ஆவின் துணை தலைவர் குணசேகர், ஒன்றிய கழகச் செயலாளர் பூவேந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், இரா. மனோகர், கே சி பழனிச்சாமி, மேல்பட்டோர் கலந்து கொண்டனர்.பெரியார் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது