07/Dec/2020 07:57:09
புதுக்கோட்டை: தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஜாக்டோ ஜியோ சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு
இந்தியாவின் உயிர்நாடியான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கவும் வேளான் சட்டத்தை ரத்து செய்ய கோரும் போராட்டத்தையும் ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள் அனைவரும் சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய தவறாது கலந்து கொள்ள மாவட்ட ஜேக்டோ-ஜியோ அழைப்பு விடுத்துள்ளது.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் டிச.8 மாலை 5 மணியளவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.