logo
தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

07/Dec/2020 07:57:09

புதுக்கோட்டை: தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக  ஜாக்டோ ஜியோ சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு

இந்தியாவின் உயிர்நாடியான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கவும் வேளான் சட்டத்தை ரத்து செய்ய கோரும் போராட்டத்தையும் ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள் அனைவரும் சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய தவறாது கலந்து கொள்ள  மாவட்ட ஜேக்டோ-ஜியோ  அழைப்பு விடுத்துள்ளது.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் டிச.8 மாலை 5 மணியளவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

Top