05/Dec/2020 03:46:23
ஈரோடு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் எம்எல்ஏ-க்கள் கே.வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே. சி. பழனிச்சாமி, ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாசலம்,மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகசேகர், தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.