logo
மது போதையில் கிணற்றில் விழுந்து இளைஞர் சாவு.

மது போதையில் கிணற்றில் விழுந்து இளைஞர் சாவு.

19/May/2020 11:59:43

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்து இளைஞர்  உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரகுவரன் (26) விவசாயி. இவர் திங்கள்கிழமை இரவு மது அருந்திவிட்டு,போதையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து,ரகுவரன் அப்பகுதியில் இருந்த சுமார் 50 அடி ஆழமுள்ள நீரில்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.இதைப் பார்த்த அப்பகுதியினர் கயிறு மூலம் பலத்த காயமடைந்த நிலையில் ரகுவரனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரகுவரன் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

Top