logo
ஈரோட்டில் மீன் சந்தை, இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்

ஈரோட்டில் மீன் சந்தை, இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்

15/Nov/2020 09:08:08

ஈரோடு: தீபாவளி பண்டிகை நேற்று கொரோனா அச்சத்தையும் கடந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு அமாவாசை மற்றும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால் பெரும்பாலான மக்கள் அன்றைய தினம் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்தனர். அதேசமயம் நேற்று இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காலையில் இருந்தே கடைகளில் இறைச்சி வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஈரோடு ஸ்டோனிபாலம் அருகில் உள்ள மீன்மார்க்கெட்டிலும், காவிரிக்கரையில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கனி சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக அங்கு கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் காய்கறிகளின் விற்பனையும் குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Top