logo
ஈரோடு  அருகே விபத்து: கல்லூரி மாணவர் பலி

ஈரோடு அருகே விபத்து: கல்லூரி மாணவர் பலி

15/Nov/2020 08:14:21

ஈரோடு கொல்லம்பாளையம் எல் ஜி ஜி எஸ் காலனியை சேர்ந்தவர் யஸ்வந்த் (21) கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு யஸ்வந்த் தனது நண்பர்களுடன் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சித்தோடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

 ஈரோடு சத்தி ரோடு சூலை எடுத்த கனி ராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது தனக்கு முன்பாக சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல யஸ்வந்த் முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி  நிலைதடுமாறி கீழே இழுத்து செல்லப்பட்டு விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய யஸ்வந்தை அந்த பகுதியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் யஸ்வந்த்  ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Top