logo
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாபெரும் இரத்த தான முகாம்.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாபெரும் இரத்த தான முகாம்.

07/Nov/2020 11:41:08

புதுக்கோட்டை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்டம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் கட்சியின் அலுவலகத்தில் இன்று(7.11.2020) நடத்தப்பட்டது.

முகாமிற்கு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, மய்யம் ஐடி மாவட்ட செயலாளர் ஏ.ஹக்கீம், வழக்குரைஞர் அணி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வி.சுரேஷ்குமார், பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் பொறியாளர் என் .முருகவேல், வழக்குரைஞர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த இரத்ததான முகாமிற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் அழகம்மை தலைமையில் மருத்துவக் குழுவினர் வந்திருந்து ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை வழங்கி  72 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் பொன்.கஜேந்திரன், கே.செந்தில்குமார் ல் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். முன்னதாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு நகரச் செயலாளர் எம்.ராஜகோபால் வரவேற்றார். நிறைவில் பகுதிச் செயலாளர்  எஸ்.பரணிதரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுந்தர் மெஸ் சுந்தர், திருமயம் ஒன்றிய செயலாளர் திருமேனி, திருமலை, ராம்ராஜ், மாதவன், சக்திவேல், பாஸ்கர், சாதிக், பவித்ரா, உமா மகேஸ்வரி, தனசேகர், பழனியப்பன், கமல், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Top