logo
சென்னையில் சிக்னல் நிறுத்தங்களில் வெள்ளைக் கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம்

சென்னையில் சிக்னல் நிறுத்தங்களில் வெள்ளைக் கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம்

03/Nov/2020 01:34:40

சென்னையில் சிக்னல் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லைன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை 4-ம் தேதி முதல் போக்குவரத்து போலீசார் தீவிரமாக அமல்படுத்த உள்ளனர்.

சிக்னல்களில் சிவப்பு நிற சிக்னல்கள் விழும்போது வெள்ளைக் கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைபிடிக்காததால், பாதசாரிகள் சாலைகளை கடக்க முடியாமல் தவிப்பதோடு, போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன.

இதையடுத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்து, 408 சிக்னல்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Top