logo
ஈரோடு எம்எஎல்ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த  மாற்று கட்சியைச் சோர்ந்த 200 பேர்

ஈரோடு எம்எஎல்ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியைச் சோர்ந்த 200 பேர்

31/Oct/2020 05:54:12

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. 

எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாற்று கட்சிகளை சேர்ந்த 200 பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுக.வில் இணைத்து கொண்டனர்.

இதில், அதிமுக பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ், முருகுசேகர்,  தங்கமுத்து, ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம், பி.பி.அக்ரஹார பகுதி செயலாளர் ராமசாமி ஆகியோர் செய்திருந்தனர். 


Top