logo
புதுக்கோட்டை மாவட்ட  சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீ ர் பாசன திட்டத்தில்  75 சதவீத   மானியம்  பயன்பெறலாம்

புதுக்கோட்டை மாவட்ட சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீ ர் பாசன திட்டத்தில் 75 சதவீத மானியம் பயன்பெறலாம்

30/Oct/2020 10:07:47

புதுக்கோட்டை: இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறையுள்ள மாநிலம் என்பதால், கிடைக்கும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்திடவும், குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர் பாசனமுறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.  அதன் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் அளித்துவருகிறது.

பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, விவசாயிகள் நுண்ணீர்ப் பசானமுறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணை நிலை நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நுண்ணீர்ப்பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர்ப்பாசன முறைக்காக வழங்கப்படும்  மானியம் மட்டுமல்லாது, குழாய்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும் நீரினை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை  நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலைநீh; மேலாண்மைப் பணிகளுக்காகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.25,000, டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதத் தொகை, ரூ.15,000த்திற்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதத் தொகை எக்டருக்கு ரூ.10,000-க்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு, அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000-க்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பணிகளுக்கான மானியம், நுண்ணீர்பாசனமுறையினை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா; அலுவலகங்களை அணுகி கூடுதல் தகவல்கள் பெற்று பயன் பெறலாம். 

Top