logo
அணவயலில் குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி வழங்கல்.

அணவயலில் குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி வழங்கல்.

27/Apr/2020 12:19:09

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள எல்.என் புரம் (அணவயல்) ஊராட்சியில் உள்ள 1,600 குடும்பத்துக்கும் தலா 5 கிலோ வீதம் அரிசி  ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. 


144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அணவயல் ஊராட்சி நிர்வாகம், கொடையாளர்கள் சார்பில் அந்த ஊராட்சியில் வசிக்கும் 1600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் சின்னத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, காவல் ஆய்வாளர் பரத்ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அரிசி பைகளை வழங்கினர்.

Top