logo
கொத்தமங்கலத்தில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணி்ப்பு

கொத்தமங்கலத்தில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணி்ப்பு

25/Apr/2020 09:33:08


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் கிராமங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள் இளைஞர்கள்.

   சீனாவில் உள்ள உகான் நகரில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  கொரோனா தொற்று  இந்தியாவில் பரவியது. இருப்பினும் தொற்று சமூக பரவலாவதை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடு, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் தனிமையில் வசிக்க அறுவுறுத்தப்பட்டதுடன், அவர்களிடம் சோதனைகள் செய்யப்பட்டு, சிலருக்கு நோய் தொற்று அறியப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிருமி தொற்று இல்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இதைத்தொடர்ந்து,  அந்த இளைஞரின் ஊரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் முழு கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளனர் அதிகாரிகள்.

   இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கிராம எல்லை பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து,அந்த சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வாகனங்களை நிறுத்தி கிருமி நாசினி தெளித்து, வருவோருடைய தகவல்களையும் சேகரித்து வருகின்றனர் அப்பகுதி இளைஞர்கள்

  இதேபோல, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மேற்பனைக்காடு பகுதியில் இளைஞர்கள் சோதனை சாவடி அமைத்து இப்பணியை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

படம், செய்தி: மகிழினி


Top