logo
ஆலங்குடியில் தலைமைக் காவலரை தாக்கிய இளைஞர் கைது

ஆலங்குடியில் தலைமைக் காவலரை தாக்கிய இளைஞர் கைது

26/Oct/2020 08:21:35

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தலைமை காவலரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
   ஆலங்குடி அரசுமரம் பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.  இதைத்தொடர்ந்து, காவலர் ஒருவருரோடு தலைமைக்காவலர் ராமையா  அங்கு சென்றுள்ளார். அப்போது, ஆலங்குடி பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அ.முஸ்தபா(26).  அங்கு நின்றவர்களிடம் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை அங்கிருந்து செல்லுமாறு தலைமை காவலர் ராமையா கூறியுள்ளார். இதை ஏற்காமால் அவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ராமையாவை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் முஸ்தபாவை  கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Top