logo
நிஜாம் பாக்கு தொழிற்சாலைக்கு  சீல்

நிஜாம் பாக்கு தொழிற்சாலைக்கு சீல்

24/Apr/2020 03:55:17

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டையில் சுமார் 300 ஊழியர்களோடு இயங்கி வந்த நிஜாம் பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் செயல்பட்டு வந்த நிஜாம் பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலை ஊரடங்கு உத்தரவு தடையை மீறி ஏராளமான தொழிலாளர்களை வைத்து ஆலை இயக்கப்படுவதாக கிடைத்த  புகாரையடுத்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி  தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதிகபடியான நபர்கள் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை வெளியேற்றிவிட்டு ஆலைக்கு  சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Top