logo
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

25/Oct/2020 09:18:06

ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி  கொள்ளவு கொண்ட பவானிசாகர் அணையின்முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக  மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது  இந்நிலையில் நேற்று இரவு முதல் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 98.27 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1450 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறந்து விடும் தண்ணீர் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 600 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடி வீதம் என மொத்தம் 2 ஆயிரத்து 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகரித்துக் விடுவதால்பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 


Top