logo
திருமாவளவனை கண்டித்து உருவப்படத்தை எரியூட்டி பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

திருமாவளவனை கண்டித்து உருவப்படத்தை எரியூட்டி பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

25/Oct/2020 08:49:35

ஈரோடு: பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஈரோட்டில் பாஜக வினர் திருமாவளவன் உருவப்படத்தை எரியூட்டி  இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் தெற்கு மாவட்ட பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணி தலைமை வகித்தார்.  மாநில மகளிர் அணி பொதுசெயலாளர் மோகனபிரியா முன்னிலை வகித்தார். 


இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்து பெண்களை கொச்சைபடுத்தி இழிவாக பேசி, மனுதர்ம சனாதான நூல் குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், திருமாவளவனை கைது செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்  பாஜகவினரை கைது செய்ய வாகனங்களுடன் வந்தனர். அப்போது, உரிய அனுமதி பெற்றுத்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக் கூறி பாஜகவினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் திருமாவளவனின் உருவபொம்மையை எரியூட்டினார். இதைத்தொடர்ந்து சூரம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டபாஜகவினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால், ஈ.வி.என்.  சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு காரணமான பாஜகவினரை போலீஸார் கைது செய்யவில்லை. மாறாக அவர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்ய உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர் 


Top