logo
புதுகை அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம்

புதுகை அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம்

25/Oct/2020 05:14:13

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் லஞ்சம் வாங்கிய புகாரில் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன். அதே பகுதியைச் சேர்ந்த துரையரசன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக கடந்த புதன்கிழமை (அக் 21)  ரூ.11 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவு போலீஸாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார் இதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் டெய்சிகுமார் சனிக்கிழமை உத்தரவிட்டார். 


Top