24/Oct/2020 12:37:30
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள கலைஞர்சிலை திறப்பு விழா, பொற்கிளி வழங்கும் விழா, திமுக முன்னோடிகளை கௌரவிக்கும் விழா என முப்பெரும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று ஆவனத்தான்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மாவட்டம் அறந்தாங்கி
அடுத்த ஆவனத்தான்கோட்டையிலுள்ள
தனியார் திருமண
மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு புதுக்கோட்டை
தெற்கு மாவட்ட
பொறுப்பாளரும் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
ரகுபதி தலைமை
வகித்தார்.
ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட துணை செயலாளர் சீனி பழனியப்பன் அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகின்ற
நவம்பர் 2-ஆம்
தேதி காணொலிக்
காட்சி மூலமாக
திமுக தலைவர்
ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்ட திமுக
கட்சி அலுவலக
வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின்
உருவச்சிலையை திறந்து வைத்து மாவட்ட கட்சி
நிர்வாகிகள் சார்பாக பொற்கிளி வழங்கும் விழா
மற்றும் திமுகவின்
கழக முன்னோடிகள்
அனைவரையும் கௌரவிப்பது ஆகிய முப்பெரும்
விழாவை சிறப்பாக
நடத்துவது குறித்து ஆலோசித்து
பல்வேறு முடிவுகள்
எடுக்கப்பட்டன.
இந்த சிலட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ராஜசேகரன், குணா, மண்ணகுடிசோமு, மணிமொழியன்,மதி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்