logo
நீர்வரத்து குறைந்ததால் வேகமாகக் குறையும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம்

நீர்வரத்து குறைந்ததால் வேகமாகக் குறையும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம்

22/Oct/2020 11:13:13

ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி  கொள்ளவு கொண்ட பவானிசாகர் அணையின்முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்த காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 98.72 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 544 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறந்து விடும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 400 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2300 கன அடி வீதம் என மொத்தம் 2 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து காட்டிலும் திறப்பு அதிகரித்துக் உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நேற்று ஈரோடு மாவட்டத்தில் கவுந்தபாடி, தாளவாடி,  வரட்டுப்பள்ளம் பெரும் பள்ளம் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் - 12.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.  தாளவாடி - 3, பெரும்பள்ளம் - 3, வரட்டுப்பள்ளம் - 2.2 .


Top