22/Oct/2020 02:14:40
புதுக்கோட்டை: மாற்று
கட்சியில் இருந்து புதிதாய் இணைந்தவர்களுக்கு கட்சி பதவிகள் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து
பஜக தொண்டர்கள் சுவரொட்டி ஓட்டியுள்ளது புதுக்கோட்டை மாவட்ட பஜகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட பாஜகவின் ஒன்றிய நிர்வாகிகள்
தேர்வு, வாக்கெடுப்பு மூலம் இம்மாதம் நடைபெறும் என அக்கட்சியின் மாவட்டத் தலைமை தெரிவிந்துள்ளது.
ஆனால், வாக்கெடுப்புகள் ஏதும் நடத்தாமல் ஒன்றிய நிர்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டு
உள்ளார்களாம். அதிலும் வேறு கட்சிகளில் இருந்து அண்மையில் பாஜகவில் சேர்ந்த சிலருக்கு
ஒன்றிய அளவில் கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாம். இதேபோல, திருவரங்குளம் ஒன்றியத்தின்
புதிய நிர்வாகியாக திமுகவில் இருந்து பதவி கிடைக்காத விரக்தியில் வெளியேறிய ஒரு பிரமுகருக்கு
பாஜகவில் ஒன்றிய பதவி வழங்கப்பட்டுள்ளதாம். இதைக்கண்டித்து அக்கட்சியினர் புதுக்கோட்டை
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும், இதுகுறித்து,
பாஜவினரிடையே சமூக வலைத்தளங்களிலும் காரசார விவசாதம் நடைபெற்றுவருகிறது. மாவட்ட தலைமையை
கண்டித்து கட்சித்தொண்டர்கள், நிர்வாகிகள் நோட்டீஸ் அடித்து ஓட்டியுள்ளது புதுக்கோட்டை
மாவட்ட பாஜகவினரிடையே புகைச்சலை கிளப்பியுள்ளது.