logo
கே.நெடுவயல் ஊராட்சியில் பகுதி நேர நியாயவிலை விலைக் கடை திறப்பு.

கே.நெடுவயல் ஊராட்சியில் பகுதி நேர நியாயவிலை விலைக் கடை திறப்பு.

20/Oct/2020 09:25:13

சிவகங்கை மாவட்டம், எஸ். புதூர் ஒன்றியம், கே.நெடுவயல் ஊராட்சியில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் உத்தரவின்பேரில் மாவட்ட கவுன்சிலர் பொன்மணி பாஸ்கர் மற்றும் கே.நெடுவயல் ஊராட்சித் தலைவர் சரவணன் ஆகியோரின் முயற்சியில் பழைய நெடுவயல் கிராமத்தில் புதியதாக பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

கே.நெடுவயல் ஊராட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற  நிகழ்வில்  பகுதி நேர நியாயவிலைக் கடையை மாவட்ட கவுன்சிலர் பொன்மணி பாஸ்கர் திறந்து வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 


Top