logo
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்

19/Oct/2020 11:33:38

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் புதுக்கோட்டை மத்திய மாவட்ட அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் அணி மத்திய மாவட்ட செயலாளர் வி.சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் கே.முரளிதரன், வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞர் அணி மாநில செயலாளர் ஒய்வுபெற்ற நீதிபதி கே.குருவைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச சட்ட ஆலோசனை மையத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வழக்குரைஞர்  அணியின் மாநில துணை செயலாளர் பொன்.கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் கே.செந்தில்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வழக்குரைஞர் அணியின் மாநிலச் செயலாளர் குருவைய்யா  முன்னிலையில் மாற்றுக்கட்சி வழக்குரைஞர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும்,  இலவச சட்ட ஆலோசனை வேண்டி பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

ஏழை, எளிய மக்கள் தங்களின் சட்டப்பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் நண்பகல் 1மணி வரை இந்த ஆலோசனை மையம் செயல்படும் என்று வழக்குரைஞர் அணியின் மத்திய மாவட்ட செயலாளர் வி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

நகரச் செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். பகுதிச் செயலாளர் S.பரணிதரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், திருமேனி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஹக்கீம், விவசாய அணி பொறுப்பாளர் மூர்த்தி, சாதிக், முருகவேல் ஆகியோர் செய்திருந்தனர்.  ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன்  விழாவினை தொகுத்து வழங்கினார்.


Top