14/Oct/2020 08:17:44
புதுக்கோட்டை நகரிலுள்ள சாந்தநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. நந்திக்கு பாலபிஷேகம் பன்னிர் தயிர் இளநீர் சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மலர் அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து,
சாந்தநாத சுவாமிக்கும், வேதநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சுவாமியை தரிசனம்செய்தனர்