logo
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் புறக்கணிப்பு :திமுக, காங்கிரஸ் கட்சிகள் அறிவிப்பு

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் புறக்கணிப்பு :திமுக, காங்கிரஸ் கட்சிகள் அறிவிப்பு

23/Mar/2020 01:41:32

சட்டசபை கூட்டத்தொடரை தி.மு., காங்கிரஸ் கட்சிகள் புறக்கணிப்பதாக எதிர்கட்சி தலைவர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆனால், மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர்  தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 396 பேர் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் 9 பேர்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை மார்ச் 31 வரை முடக்க தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரிய திமுகவின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், திமுக காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிகளும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளது

Top