logo
பாரத் ரோட்டரி சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் வழங்கல்

பாரத் ரோட்டரி சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் வழங்கல்

13/Oct/2020 03:59:28

கந்தர்வக்கோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக சிறந்த சமூக சேவகர் விருதுகள் வழங்கும் விழா மற்றும் குடும்ப சந்திப்பு விழா சங்கத் தலைவர் பி.அறிவழகன் தலைமையில் கந்தர்வக்கோட்டை எம்ஆர்எஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த சமூக சேவைகளைப்  பாராட்டி புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி  மோகன்ராஜ், கறம்பக்குடி ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் எவரெஸ்ட் கே.சுரேஷ் ஆகிய இருவருக்கும்  சிறந்த சமூக சேவகர் விருது  வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கறம்பக்குடி ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் அந்தோணிசாமி, முன்னாள் துணை ஆளுனர் அருண்குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த சேவியர், வைரக்கண்ணன், ரோட்டரி பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி, அரசு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவரும் முகக்கவசம் அணிந்து நடத்தப்பட்டது. நிறைவாக சங்கச் செயலாளர் என். சண்முகம் நன்றி கூறினார்.

Top