logo
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து ஆறு பேர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து ஆறு பேர் பலி

20/Mar/2020 06:29:35

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று(மார்ச்20) பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஆறு பேர் பலியாகினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறையில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இன்று (மார்ச்20) மதியம் திடீரென்று பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாத்துர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

 

Top