logo
காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தியின் தந்தையார் உருவப்படம் இன்று திறப்பு

காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தியின் தந்தையார் உருவப்படம் இன்று திறப்பு

10/Oct/2020 08:30:13

காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் டாக்டர் பா. மூர்த்தியின் தந்தை அமரர் பெ. பால்சாமி சேர்வையின் உருவப் படத்திறப்பு விழா திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் இன்று(அக்.10) நடைபெற்றது.

விழாவில், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி அவரது  உருவப் படத்தினை திறந்து வைத்து, சிந்தையில் எம்தந்தை என்ற நூலினை வெளியிட்டார்.  

அதனை, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, அறந்தை கனகராஜ், புதுகை கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

நிகழ்ச்சியில், முனைவர் பா. மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர். 

பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,  திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அரு. வீரமணி, புதுக்கோட்டை நகரதிமுக செயலாளர் க. நைனாமுகம்மது, புதுக்கோட்டை கே.என்.ஆர். ரவி, செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Top