logo
கோபிச்செட்டிபாளையத்தில் சென்னையைச் சேர்நத ரவுடிகள் 5 பேர் கைது

கோபிச்செட்டிபாளையத்தில் சென்னையைச் சேர்நத ரவுடிகள் 5 பேர் கைது

10/Oct/2020 11:51:06

ஈரோடுமாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் பட்டாக்கத்தி வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த  சென்னையைச் சேர்ந்த 5 ரவுடிகளை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கோபிச்செட்டிபாளையத்தில் வெளியூரைச்சேர்ந்த சில நபர்கள் நடமாடுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் நடத்திய சோதனையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த சென்னை, நங்கநல்லூர் கன்னித்தமிழ் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சத்யா என்கிற சத்யநாராயணன் (26), சென்னை மடிப்பாக்கம் கிருஷ்ணாநகரை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராமசந்திரன் (28), நங்கநல்லூர் பி.வி.நகரை சேர்ந்த முருகேசன் மகன் சீதாராமன்(36), பழைய பல்லாவரம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் என்கிற சுடலைராஜா(26), சென்னை மேடவாக்கம் பெரியார்நகரை சேர்ந்த சந்திரபோஸ் மகன் மணிகண்டன்(24) ஆகிய 5 பேரை  கைது செய்து அவர்களிமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 

Top