logo
சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் அவதாரத்திருநாள் கொண்டாடப்பட்டது

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் அவதாரத்திருநாள் கொண்டாடப்பட்டது

08/Oct/2020 12:06:35

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அறநெறியை வளர்த்து சன்மார்க்கத்தை தழைக்கச் செய்த  வள்ளலார் சுவாமிகளின் 198-ஆவது அவதாரத் திருநாள் புதுக்கோட்டை அருகேயுள்ள மாத்தூர் வள்ளலார்  மாணவர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். மாணவர் இல்லத்தின் காப்பாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சன்மார்க்க சங்கத்தின் துணைத் தலைவர் மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாணவர் இல்லத்தின் ஆசிரியர் ரகுபதி பேசினார்.

இதையொட்டி, வள்ளலார் மாணவர் இல்லத்தின் உணவு தேவைக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. இல்ல மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் முககவசங்கள், கைகழுவும் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன. நிறைவாக, புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெய் பார்த்தீபன் நன்றி கூறினார்.


Top