logo
வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

07/Sep/2022 08:45:01


புதுக்கோட்டை:ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் வருடாபிஷேகத்தையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன்கோயில்களில் ஒன்றான ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் 5-ம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது,கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Top