logo
ஈரோட்டில்   127 இடங்களில் 22 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோட்டில் 127 இடங்களில் 22 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

02/Sep/2021 12:29:41

ஈரோடு, செப்: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை  ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 107 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 20 இடங்களிலும் என மொத்தம் 127 இடங்களில் 22 ஆயிரத்து 630 பேருக்கு டோக்கன் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தற்போது மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி போடாமல் இருக்கும் மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Top