logo
ஈரோட்டில்  205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி

ஈரோட்டில் 205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி

25/Aug/2021 07:13:55

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 9.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில்  புதன்கிழமை ஈரோடு, மொடக்குறிச்சி கொடுமுடி பெருந்துறை பவானி அந்தியூர் கோபி சத்தியமங்கலம் தாளவாடி நம்பியூர் உள்ளிட்ட 182 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 23 இடங்களிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போடும் முகம்  நடைபெற்றது. மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். டோக்கன் அடிப்படையில் 100 முதல் 400 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

 மாவட்டத்தில் கிட்டத்தட்ட நீண்ட நாள் கழித்து  கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்தை 70 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசியும், 12,290 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி என மொத்தம் இன்று மட்டும் 32 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Top